நான் கற்றதையும் பெற்றதையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டி முற்பட்டதன் விளைவு இந்த எழுத்துக்கள்..............
Thursday, August 13, 2009
இளைஞர்கள்
Monday, August 10, 2009
நான் பார்த்த மனிதர்கள்
Friday, August 7, 2009
தபூசங்கர் கவிதைகள்
அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம் சொல்ல முடியாத அதி அற்புதமான மௌனத்தையும் நீதான் எனக்குத்தந்தாய்.
யாராவதுஏதாவதுஅதிர்ச்சியானசெய்தி சொன்னால்அச்சச்சோ என்றுநீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்.
என்னை எங்கு பார்த்தாலும்ஏன் உடனே நின்று விடுகிறாய்?என்றா கேட்கிறாய்.நீ கூடத்தான்கண்ணாடியை எங்கு பார்த்தாலும்ஒரு நொடி நின்று விடுகிறாய்.உன்னைப் பார்க்க உனக்கேஅவ்வளவு ஆசை இருந்தால்எனக்கு எவ்வளவு இருக்கும்...
நீ இல்லாத நேரத்திலும்உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறதுஉன் அழகு. .....
ஊரிலேயேநான்தான் நன்றாகபம்பரம் விடுபவன்ஆனால் நீயோஎன்னையே பம்பரமாக்கிவிடுகிறாய் ......
நீ யாருக்கோ செய்தமௌன அஞ்சலியைப்பார்த்ததும்...எனக்கும்செத்துவிடத் தோன்றியது..
உன்னைக் காதலித்துக்கொண்டிருக்கும்போதுநான் இறந்துபோவேனாஎன்பது தெரியாது.ஆனால்நான் இறக்கும்போதும்உன்னைக் காதலித்துக்கொண்டிருப்பேன்என்பது மட்டும் தெரியும் .
எதை கேட்டாலும் வெட்கத்தயே பதிலாக தருகிறாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
நீ வருவதற்காவே காத்திருக்கிறேன்
என்னை கடந்து போவதற்காவே வருகிறாய்
அழகான பொருள்கள் எல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துபவை
எல்லாம் அழகாகவே இருக்கின்றன
நீ நடந்து போன சுவடின்றி
அமைதியாக கிடக்கிறது
சாலை
அதிவேக ரயிலொன்று கடந்துபோன
தண்டவாளம் போல் அதிர்கிறது
என் இதயம்
அரைமணிநேரமாய்பேசிகொண்டிருக்கிறாய்..வாழ்நாள் விமோட்சனம்அடைந்துவிட்டதாய் கூச்சலிடுகிறதுசெல்போன் பொத்தான்கள்..
அழகான கன்னமெனசொல்லி கிள்ளுகிறாய்பக்கத்துவீட்டு குழந்தையை!தன்னுடையதை விடஉன்னுடையது அழகெனபொறாமையில் அழுகிறது குழந்தை....