Thursday, December 12, 2013

வேலூர் புரட்சி ஒரு கண்ணோட்டம்

இப்பொழுது உள்ள இளைங்கர்களுக்கு வேலூர் புரட்சியைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே வரலாறை நாம் படித்திருக்கிறோம்....அதை இப்பொழுது எண்ணிப் பார்த்தால் வருத்தமாகத்தான் உள்ளது. இப்பொழுது இந்த வேலூர் புரட்சியைப் பற்றி சற்று படிப்போமே!!! 1806 ம் ஆண்டு ஜூலை 10 ம் தேதி வேலூர் கோட்டையிலிருந்த இந்திய சிப்பாய்கள், வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். இந்தப் புரட்சியே வேலூர் புரட்சி எனப்படுகிறது. புரட்சிக்கு என்ன காரணம்? 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானுக்கும் நிஜாம் மற்றும் மராட்டியர்கள் ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் படைக்கும் போர் நடைபெற்றது. இதில் திப்பு கொல்லப்பட்டார். இது தென்னிந்தியா முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்த பாளையக்காரர்கள் அனைவரும் இணைந்து 1800-1801 ஆண்டுகளில் தொடர்ந்து புரட்சி நடவடிக்கைகளில் இறங்கினர். இதில் திப்புசுல்தானின் மகன்களும் பங்கு கொண்டனர். திப்புவின் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இதனால் வேலூர் நகரம் புரட்சியின் மையப்பகுதியாக விளங்கியது. இதே நேரத்தில் இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில அரசு பல புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. “மாட்டுத்தோலினால் செய்யப்பட்ட பன்றிக்கொழுப்பு தடவப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது” போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்கள் மத்தியிலும், திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகள் இந்திய சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்த்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 1806 ஜூலை 10 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் புரட்சி வெடித்தது. வேலூர் கோட்டைக்குள் அணிவகுத்துச் சென்ற இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேய படைத்தளபதிகளை சுட்டுக்கொன்றனர். பீரங்கிகளால் தாக்கிக்கொண்டே முன்னேறினர். இந்திய சிப்பாய்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்த கர்னல் மிக்கிராங் சுட்டுக்கொல்லப்பட்டான். மூன்றே மணிநேரத்தில் புரட்சியாளர்கள் கோட்டையை கைப்பற்றினர். திப்புவின் புலிக்கொடியை கோட்டையில் ஏற்றினர். சிலமணி நேரங்களில் ஆற்காட்டிலிருந்தும் மற்ற பகுதிகளில் இருந்தும் வந்த ஆங்கிலேயப் படை வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றியது. அதில் மூவாயிரம் புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரக்கணக்கான சிப்பாய்களுக்கு ஆங்கிலேய அரசு மரணதண்டனை வழங்கியது. புரட்சி தோல்வியுற்றாலும் ஆங்கிலேய அரசிற்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியதாலும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டியதாலும் இந்தப்புரட்சி வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாக பதிந்துபோனது.

Sunday, December 8, 2013

இதற்குத்தானே ஆசை பட்டாய் இந்தியனே....

நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் சோடை போகும் என்று சொல்லிவிடமுடியாது...ஏனென்றால் நம் மக்களின் எண்ண ஓட்டங்களை விஞ்கானதாலும் கண்டறிய முடியாது...இன்னும் லோக் சபா தேர்தலுக்கு ஆறு மாத காலம் உள்ள சூழ்நிலையில் இந்த காங்கிரஸ் அரசாங்கம் இன்னும் நம்பிக்கையில் இருப்பது நம் மாநில கட்சிகளின் என்னவோட்டங்களுக்காக...நம் மக்கள் தான் எவ்வளவு ஊழல் செய்தாலும் அவர்களின் ஒரு நாள் வாழ்க்கை நடத்த காசு கொடுத்தால் போதுமே...இந்த பாழாய் போன காங்கிரஸ் கூட்டணிகுத்தானே வோட்டு பொத்தானை அழுத்துவார்கள்...ஏனென்றால் காராபூந்திக்கும் ராகுல்காந்திக்கும் வித்தியாசம் தெரியாத பயபுள்ளைங்க நாம்... டெல்லியை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது...டெல்லியை போல் நம் மாநிலத்தில் புதிதாக ஆரம்பித்த கட்சியை இந்த அரசியல்வாதிகள்தான் ஏற்றுகொள்வார்களா??? இல்லை நம் மக்கள்தான் தான் ஏற்றுகொள்வார்களா??? யார் குடிப்பதற்கும் பிரியாணிக்கும் காசு கொடுப்பார்கள் என்று ஏங்கும் மக்கள் இருக்கும் வரையில் எத்தனை பெரியார் வந்தாலும் நம் மக்களை திருத்த முடியாது...இந்த நேரத்தில் நாம் ஆம் ஆத்மி கட்சியை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்... வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்! டெல்லியில் எவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்,மீண்டும் ஒருமுறை டெல்லியில் தேர்தல் நடத்துவதே உத்தமம்.அதனால் மக்கள் வரிப்பணம் வீணாக போனாலும் பரவாயில்லை! இந்த இரண்டு தேசிய கழிசடை கட்சிகளையும், எஙகெல்லாம் ஒழிக்க முடியுமோ,அங்கெல்லாம் மெல்ல மெல்ல ஓரம் கட்டி ஒழித்தாகவேண்டும். இரண்டு பயலும் அயோக்கியனுங்க தான்!ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல!இந்த நேரத்தில் மாற்று கட்சியினரின் ஆதரவை விலை பேசும், அயோக்கியத்தனங்களை எல்லாம் தடுக்க வேண்டும்.அப்படி செய்யும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.அப்படி விலை போகும் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்.மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!எப்படியாயினும் மாற்றம் தேடி வாக்களித்த,டெல்லி மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த,கேஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!