Sunday, December 8, 2013

இதற்குத்தானே ஆசை பட்டாய் இந்தியனே....

நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் சோடை போகும் என்று சொல்லிவிடமுடியாது...ஏனென்றால் நம் மக்களின் எண்ண ஓட்டங்களை விஞ்கானதாலும் கண்டறிய முடியாது...இன்னும் லோக் சபா தேர்தலுக்கு ஆறு மாத காலம் உள்ள சூழ்நிலையில் இந்த காங்கிரஸ் அரசாங்கம் இன்னும் நம்பிக்கையில் இருப்பது நம் மாநில கட்சிகளின் என்னவோட்டங்களுக்காக...நம் மக்கள் தான் எவ்வளவு ஊழல் செய்தாலும் அவர்களின் ஒரு நாள் வாழ்க்கை நடத்த காசு கொடுத்தால் போதுமே...இந்த பாழாய் போன காங்கிரஸ் கூட்டணிகுத்தானே வோட்டு பொத்தானை அழுத்துவார்கள்...ஏனென்றால் காராபூந்திக்கும் ராகுல்காந்திக்கும் வித்தியாசம் தெரியாத பயபுள்ளைங்க நாம்... டெல்லியை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது...டெல்லியை போல் நம் மாநிலத்தில் புதிதாக ஆரம்பித்த கட்சியை இந்த அரசியல்வாதிகள்தான் ஏற்றுகொள்வார்களா??? இல்லை நம் மக்கள்தான் தான் ஏற்றுகொள்வார்களா??? யார் குடிப்பதற்கும் பிரியாணிக்கும் காசு கொடுப்பார்கள் என்று ஏங்கும் மக்கள் இருக்கும் வரையில் எத்தனை பெரியார் வந்தாலும் நம் மக்களை திருத்த முடியாது...இந்த நேரத்தில் நாம் ஆம் ஆத்மி கட்சியை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்... வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்! டெல்லியில் எவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்,மீண்டும் ஒருமுறை டெல்லியில் தேர்தல் நடத்துவதே உத்தமம்.அதனால் மக்கள் வரிப்பணம் வீணாக போனாலும் பரவாயில்லை! இந்த இரண்டு தேசிய கழிசடை கட்சிகளையும், எஙகெல்லாம் ஒழிக்க முடியுமோ,அங்கெல்லாம் மெல்ல மெல்ல ஓரம் கட்டி ஒழித்தாகவேண்டும். இரண்டு பயலும் அயோக்கியனுங்க தான்!ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல!இந்த நேரத்தில் மாற்று கட்சியினரின் ஆதரவை விலை பேசும், அயோக்கியத்தனங்களை எல்லாம் தடுக்க வேண்டும்.அப்படி செய்யும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.அப்படி விலை போகும் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்.மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!எப்படியாயினும் மாற்றம் தேடி வாக்களித்த,டெல்லி மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த,கேஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

No comments:

Post a Comment