Monday, August 10, 2009

நான் பார்த்த மனிதர்கள்

சில சமயம் நான் கடவுளின் மீது கோபம் கொள்வது உண்டு. ஏனென்றால் என் சிறு வயதில் சிறு வயது என்றால் என் அப்பாவின் கைப் பிடித்து நடந்த வயதில் நான் பார்த்த மனிதர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே தான் இப்பொழுது வரை இருக்கிறார்கள். நான் படித்த வரலாறுகளாகட்டும், கதைகளாகட்டும் அதில் வருபவர்கள் அனைவரும் முன்னேறிவிடுகிறார்கள். ஆனால் நான் பார்த்த மனிதர்களில் பெரும்பாலோனோர் எப்படி இருந்தார்களோ அப்படியே இன்னும் இருக்கிறார்கள்.இவ்வளவுக்கும் அவர்கள் யாரும் உழைக்காமல் இல்லை..... செருப்பு தைப்பவர் இன்னும் செருப்பு தைத்துக்கொண்டு தான் இருக்கிறார், மூட்டை சுமப்பவர் இன்னும் மூட்டையை மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறார்.நான் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போது அவர்களைப் பார்ப்பதுண்டு.என்னால் முடிந்த உதவிகளையும் செய்துவிட்டு வருவதுண்டு. சில சமயம் நினைத்துப்பார்க்கும் போது எனக்கு விந்தையாகவே உள்ளது. அப்பொழுது எனக்குள் எழுந்த எண்ணங்கள் ஆயிரம் ஆயிரம்....அதில் அவர்கள் செய்யும் தொழிலின் மீது தவறா????? இல்லை இந்த சமுதாயத்தின் மீது தவறா????? என்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்காதா நாமும் இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று??? எனக்குத் தெரிந்து நம் நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரியான நிலைமை. அவர்களின் வாழ்வுக்கும் அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் இல்லை; அவர்களின் குழந்தைகளின் கல்வியாகட்டும், வாழ்க்கையாகட்டும் அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை முழுமையாக சென்றடைகிறதா என்பது தான் கேள்விக் குறி.சமுதாயத்திலும் இன்னும் அவர்களுக்கு முழுமையான அங்கிகாரம் கிடைக்க வில்லை என்பது தான் என்னுடைய கருத்து.நம்மில் இன்னும் எத்தனை பேர் செய்யும் தொழிலை வைத்து அவர்களை எடை போடுகிறோம்... ஆனால் அவர்கள் நேர்மையாக உழைக்கின்றனரா என்று ஒரு போதும் பார்ப்பதில்லை... உதாரணத்திற்கு பேருந்தில் நமக்கு அருகாமையில் உட்காருபவர்கள் நல்ல ஆடை அணிந்து டிப் டாப்பாக இருந்தால் தான் நாம் இடமே கொடுக்கிறோம்.பின்பு எப்படி அவர்களுக்கு மனதில் இடம் கொடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்ப்படுத்த நமக்கு மனம் வரும். நானே சில சமயம் ஆள் பார்த்து இடம் கொடுத்ததுண்டு... இப்பொழுது அதை நினைத்துப்பார்க்கும் பொழுது என்னை நினைத்து நானே வெட்க்கப்படுவதுண்டு. அப்பொழுது வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத வயது.ஏற்றத்தாழ்வுகள் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் யார் வாழ்கையிலும் வரும் என்பதை புரிந்துகொள்ள முடியாத பருவம்.நான் ஒன்றும் தெரியாத மனிதர்களுக்கு உதவுங்கள்,கருணைபடுங்கள் என்று கூறவில்லை... நமக்கு தெரிந்த நாம் சிறு வயது முதல் பார்த்து வந்த மனிதர்களுக்கு நம்மால் ஆனா உதவிகளை செய்தாலே போதுமானது... அதை விட்டு விட்டு கண்ணுக்குத் தெரியாத மனிதர்களுக்கு நான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் ஒன்றும் இல்லை. அரசாங்கமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்...அரசாங்கம் செய்யும் நலத்திட்டங்களை முழுமையாக அவர்களுக்கு சேருமாறு செய்து மற்றும் நம்மை போன்றவர்கள் முயற்சி எடுத்து செய்தாலே கோடான கோடி மக்களின் வாழ்வுக்கு வெளிச்சம் ஏற்றிவிடலாம்........

4 comments:

அமுதா கிருஷ்ணா said...

நல்ல பதிவு..எல்லோருக்கும் இந்த எண்ணம் வர வேண்டும்..

Venkatesh said...

நன்றிகள் பல.....

நவீன் said...

dhinamum nam valkkayil nadakkum sambavangalai nangu ulvaangureenga..thodarattum...

Unknown said...

படிப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும் இதை செயல் படுத்துவதற்கு மிகவும் கஷ்ட பட்டு கொண்டிருகிறேன் .என்னுடயே எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது
சந்தோஷ்

Post a Comment