Saturday, April 17, 2010

வாழ்க்கை

இது எனது ஐம்பதாவது பதிவு. ஒரு பொழுதுபோக்கிற்காக பதிவு எழுதுவதை ஆரம்பித்தேன் ஆனால் அதுவே என்னை ஐம்பது பதிவுகள் வரை எழுத என்னை தூண்டியது. இதுவரை ஆதரவு தந்த இனிமேல் ஆதரவு தரப்போகும் நல்ல உள்ளங்களுக்கு இந்த பதிவின் மூலம் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏதாவது சிறப்பாக எழுத வேண்டும் என்று எண்ணி என்ன எழுதலாம் என்று யோசித்த பிறகு எழுத முற்ப்பட்டதே இந்த வாழ்க்கை.

நமது வாழ்க்கையை நமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டிருப்பதாக ஓர் எண்ணத்தில் நாம் இந்த உலகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் சிறு வயது முதல் நமது எதிர்காலத்தைப் பற்றி ஓர் திட்டத்தை சிறிய அளவிலாது தயாரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது வாழ்க்கையை எவ்வாறு வாழப்போகிறோம், நமது மனைவி அல்லது கணவன் எப்படி இருக்க வேண்டும், இல்லற வாழ்விலே கணவன் அல்லது மனைவியிடம் எப்படி பழகபோகிறோம் என்பது பற்றி ஓர் அனுமானம் கொண்டிருப்போம்.இது நமது அகப்புற சூழ்நிலைகளால் உண்டாகும். அதாவது நமது தாய் தந்தயருக்கிடையில் இருக்கும் உறவுமுறையன்றி,நாம் அடிக்கடி நெருங்கிப் பழகும் உறவினர்கள் மத்தியில் நிலவும் உறவுமுறைகளின் தாக்கங்களினால் நமது மனதில் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும்.

நம்மில் எத்தனை பேர் நாம் நினைத்தபடியே நமது வாழ்க்கையை அமைக்கிறோம் என்று எண்ணிப்பார்த்தால் மிகவும் சொற்பமானவர்களே என்று கூறலாம்.இதன் காரணம் நமது வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதே. நமது சூழ்நிலை, நமது மனப்பான்மை, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உறவுமுறையின் தாக்கம் நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து விடுகிறது என்பதே உண்மை.

இதை ஏற்றுக்கொள்ள நம்மில் பலர் மறுத்தாலும் இது ஒரு எதார்த்தமான உண்மை நிலையாகும். இந்த நிலையில் நாம் எப்படி அமைதி அடைவோம்? ஆற்று வெள்ளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஒருவன் அதைக் கடப்பது என்பது அவனைப் பொறுத்தே உள்ளது. வெள்ளம் ஓடும் திசைக்கு எதிராக கடக்க முற்ப்பட்டால் அவனது பயணம் கடினமாகிறது. அதேசமயம் அவன் அந்த ஆற்றை வெள்ளத்தின் திசையிலேயே சென்று கடக்க முற்ப்பட்டால் மிகவும் எளிதாக கடந்து விட முடியும்.சேர எண்ணிய இடத்தைவிட சில அடி கடந்து மறுகரையை அடைந்தாலும் பயணம் இலகுவாகிறது. இதைப்போலவே சிலசமயங்களில் வாழ்வில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை எதிர்ப்பதைவிட அதன் பாதையில் சென்று இலக்கை அடைவது என்பது சிரமத்தைக் குறைக்கும்.

நமது கையில் ஒன்றும் இல்லை. ஆனால் கடவுள் போட்ட விதி என்று எண்ணி நாம் வாழ்க்கை எனும் வண்டியில் பயணம் செய்யும் பொது நம்பிக்கை என்னும் எரிசக்தியை உபயோகித்தால் நம் பயணம் எளிதாகும்.

5 comments:

Unknown said...

Hi Venkatesh,

I am very happpy that you have reahed a milestone(50th) in writing also.

Wish you all the best to cross more milestones in near future.

Santhosh

Venkatesh said...

Thanks a lot santhosh.

Sharan said...

Dai Nanbha

rhombha perumiya irukku da. Looking forward to see more from you. So nice to see your thoughts on different areas of life. Venky, it will be nice if you could write a blog about our hostel life with special focus on friendship.

Sharan

Venkatesh said...

Thanks a lot machi.... Your dream comes true very soon....

V.S.SUNIL KUMAR PILLAI said...

நல்ல பதிவு வாழ்த்துகள் ( ஐம்பதாம் பதிவிற்காக)

Post a Comment