Wednesday, July 22, 2009

பிளவர் மில்

உங்களில் பெரும்பாலோனோருக்கு பிளவர் மில் மற்றும் ரைஸ்மில்லை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. என் நண்பரோடு சேர்ந்து பால்ய நினைவுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது தோன்றியது இந்த பிளவர் மில். இப்பொழுது இருக்கும் தூரிதஉணவு கலாச்சாரத்தில் இந்த பிலௌர் மில் எல்லாம் மறக்கடிக்கப் பட்டுவிட்டது. இந்த பிலௌர் மில் 1975 தொடங்கி ௨000 வரை பிரசித்தம். மிளகாய், மல்லி,கோதுமை, சீயக்காய் இவை எல்லாம் இந்த பிலௌர் மில்லில் தான் மக்கள் அரைக்க வருவார்கள். என் பள்ளி நாட்களில் எனக்கும் அந்த அனுபவம் மிகவும் உண்டு . பிலௌர் மில் போவது என்பது அலாதியான இன்பம் தான் அப்பொழுது. ஏனென்றால் நண்பர்கள் சூழ மிளகாய்,மல்லி, கோதுமைகளை வாளியில் போட்டுக் கொண்டு ஜாலி யாக போய் வருவோம். அதுவும் நான் இருந்தது காலணி வீடு. என் வயது சிறார்கள் அதிகம் அப்பொழுது. ஒருவன் பிளவர் மில் போனால் அனைவரது வீட்டிலும் அன்று மாவு அரைக்க சென்று விடுவோம் வீட்டில் சண்டை போட்டாவது.... மிளகாய் அரைக்க போகும் போது அது நன்றாக காய்ந்திருக்க வேண்டும் இல்லையென்றால் கடைக்காரன் திருப்பி அனுப்பிவிடுவான்.மிளகாய் அறைக்கபோகும் போது மட்டும் பயந்து கொண்டே செல்வோம். மல்லி அறைக்கபோகும் போது மட்டும் அம்மா ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லி அனுப்புவாள் மல்லியை அரைத்த பிறகு நன்றாக சூடு தணித்துவிட்டு வா என்று.... அதற்காக பிலௌர்மில்லில் இரும்பினால் செய்யப்பட்ட தட்டில் அந்த பொடியை காயபோட்டு விடுவேன். அதுவும் மிளகாய் பொடி காயப்போட்டதில் மல்லிபொடியை காயவைக்க கூடாது.பொடியை காய வைக்காமல் போனால் கருத்துவிடும் அதனால் கொழம்பும் கருப்பாக போய் விடும் என்று பயம்புருத்திய நாட்கள். எத்தனை உண்மை இதெல்லாம்!!!! அரைக்கும் ஊழியனிடம் சண்டையிடுவேன் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறையாவது அரை என்று. இவை எல்லாம் அம்மா எனக்கு இட்ட கட்டளைகளின் பேரில். அதுவும் அவன் சலிப்பிற்க்கு அளவே கிடையாது. அந்த காலத்தில் பொடி அரைப்பதற்கு அவ்வளவு மெனக்கெட வேண்டும். அரைத்துக் கொண்டிருக்கும்போதே கரண்ட் போய் விட்டால் அவ்வளோதான் பொடி அனைத்தும் கருப்பாகி விடும். அதனால் ஆண்டவனை வேண்டிக் கொண்ட நேரம் அது. பிலௌர் மில் பக்கம் போனாலே அந்த பொடிகளின் நெடி மூக்கை தொலைக்கும். தீபாவளி சமயம் என்றால் பிலௌர் மில் பக்கம் போகவே முடியாத நிலை... முறுக்கு மாவு, அதிரச மாவு அரைக்க என்று மக்கள் கூட்டம் அலை மோதும். காலை நேரத்தில் சென்றால் வீடு திரும்ப மதியம் ஆகி விடும் சூழ்நிலைக்கும் நான் தள்ளப் பட்ட காலம் அது. இப்பொழுது நாகரிகத்தின் மாற்றத்தால் அடைக்கப்பட்ட மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள் இன்னும் சில... இன்னும் என் அம்மா பிலௌர் மில்லில் அரைக்கப்பட்ட மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்களை உபயோகிக்றாள். அதனால் தான் என்னவோ அவளின் பாசத்தைப் போல் அவளுடைய சமையலும் மாறாமல் இருக்கிறது. இன்னும் அவள் ஒரு படி மேல போய் அமெரிக்காவில் இருக்கும் என் சகோதரிக்கும் அதை பொட்டலம் கட்டி அனுப்பி வைக்கிறாள். இன்றைய தலைமுறையினர்க்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கட்டுரை எழுதுவதற்கு காரணமாக இருந்த என் நண்பர் மனோஜிற்குத் தான் நான் முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.......

2 comments:

நவீன் said...

nandraaga ulladhu...enakkum indha anubavam irukkiradhu...

karthi said...

palaya ninaivugalai thirumbi parpadharku ubayogamaga irundha ungaladhu indha katturai, nitchayam parattudalukku uriyadhu

Post a Comment