Thursday, August 13, 2009

இளைஞர்கள்

முன்பெல்லாம் ஒரு வழக்கம் உண்டு வழக்கம் என்பதை விட அதை பழமொழி என்றே கூறலாம் உன் நண்பனை பற்றி சொல் நான் உன்னைப் பற்றி கூறுகிறேன் என்று. இப்பொழுதெல்லாம் இதை பின்பற்றினால் நம்மைப் போன்ற அறிவிலி யாரும் இல்லை என்றே கூறலாம்.இப்பொழுது உலகம் வளர்ந்து வரும் நிலையில் உறவுகளையே மறக்கத் துடிக்கும் சமுதாயத்தில் நண்பர்களை அதுவும் பால்ய கால நண்பர்களை நினைத்துப் பார்க்கக் கூட மனிதன் நேரம் இல்லாமல் பணத்தை தேடி அலைந்துகொண்டிருக்கிறான்.சிறு வயதில் கொண்ட நட்பு என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதார்த்தமாக இருந்தது. நாளாக நாளாக நாம் வளருவதைப் போல நண்பர்களிடையே எதிர்பார்ப்புகளும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.நான் இவனுக்கு இதை செய்திருக்கிறேன் என்றால் இவனும் இதை எனக்கு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்பொழுது வருகிறது என்று கேட்டால் நான் விடையற்று நிற்கின்றேன்.நான் மட்டும் அல்ல என்னை போன்ற பலருக்கும் இதே போன்ற கேள்விகள் ஆயிரம் இருக்கும்.ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே!!! பழகும் பொழுது எதிர்பார்ப்பில்லாமல் பழகும் ஒரு சிலர் பழகிய பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டே நம்மிடம் பழகுகிறார்கள். கேட்டால் உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் சென்று நான் கேட்பது அது உனக்கு அசிங்கம் இல்லையா என்றதொரு விளக்கம் வேறு. அதில் தவறில்லை நாம் நன்றாக இருந்தால் நண்பர்களுக்கு மட்டும் இல்லை உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் நம்மால் ஆன உதவிகளை செய்யலாம். நாமே இங்கு கஷ்டப்படும் போது நம்மால் பிறர்க்கு எப்படி உதவ முடியும்???? இதற்க்கு நல்ல உதாரணங்கள் உண்டு. நகரத்தில் இருக்கும் அனைவரும் இதை அனுபவப்பட்டிருப்பார்கள். முன்பெல்லாம் சென்னை போன்ற பேரு நகரங்களில் திருமணமாகாத வாலிபர்களுக்கு வீடு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம்.அப்படியும் கிடைத்து விட்டால் ஆயிரம் நிபந்தனைகள். மூன்று பேருக்கு மேல் தங்கக் கூடாது, காலையில் மட்டும் தான் தண்ணீர் வரும்; அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அதற்க்குள் எல்லா வேலைகளையும் நாம் முடித்திருந்திருக்க வேண்டும்.அப்பொழுது நண்பர்களில் ஒருவன் மட்டுமே வேலைக்குச் செல்வான். மற்றவர்கள் வேலை தேடிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் சூழ்நிலையில் படித்து முடித்து வரும் நண்பர்கள்,உறவினர்கள் எல்லாம் நேராக நாம் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.(எப்படித்தான் நாம் இருக்கும் விலாசம் கிடைக்குமோ???) நிலைமையை எடுத்துச் சொன்னாலும் அவர்களை நாம் வேண்டுமென்றே தவிர்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டே சென்று விடுவார்கள். பிற்பாடு அவர்களுக்கும் நமக்கும் ஒரு தொடர்பே இல்லாமல் போய் விடும்.ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையே வேறு. திருமணம் ஆகாதவர்களை தவிர வேறு யாருக்கும் வீடு கிடைப்பதில்லை.இப்பொழுதெல்லாம் படிக்கும் பொழுது நட்புடம் இருப்பவர்கள் படித்து முடித்த பின்னரும் ஒன்றாக வீடு எடுத்து தங்கி வேலை தேடுகிறார்கள்.அதை நினைக்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாகவே இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் வேலை கிடைத்து விட்டு ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைக்காவிட்டால் ஒரு வித பொறாமை வந்து விடுகிறது அதுவே அவர்களின் நட்புக்கு ஒரு விரிசல் வர காரணமாகி விடுகிறது. நட்பு என்பது சகிப்புத்தன்மை,பொறாமை அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது அப்பொழுது எல்லாம் தெரியாது.ஏனென்றால் அதெல்லாம் பக்குவப்படாத வயது.வாழ்க்கைக்கும் தேர்வுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். படித்து முடித்து விட்டு தேர்வு எழுதிய பின்பு தான் நமக்கு முடிவுகள் வரும். ஆனால் வாழ்கையில் முடிவுகள் வந்த பின்பு தான் நாம் படிக்கவே ஆரம்பிப்போம். "உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொன்னால்,யாரும் நண்பனாக இருக்கமுடியாது ,நல்லவர்கள் மட்டும் நண்பர்களாகி விட்டால் ,தவறான வழியில் செல்பவர்களை யார் வழிநடத்துவது.கெட்டவர்கள் இருந்தால் அந்த நட்பு கெட்ட நட்பும் .நல்லவர்கள் இருந்தால் அது நல்ல நட்பும் என்றும் சொல்வது வேடிக்கையான விஷயம்.ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ஒரு கெட்டவன் இருந்தால் அவனை ஒழுங்குபடுத்துவது ஒரு உண்மையான நண்பனின் கடமையாகும்.அதை விட்டு விட்டு அவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன என்று இல்லாமலும், இல்லை அவன் செய்யும் செயல்களுக்கு உடன் போகாமல் இருப்பதும் ஒரு நல்ல நண்பனின் தலையாய கடமையாகும்.இப்பொழுதெல்லாம் சமுதாயத்தில் ஒரு பரவலான கருத்து நண்பர்கள் ஒன்று சேர்ந்தாலே குடியும் கும்மாளமும் தான் என்று. அந்த கருத்தை தகர்த்தெறிந்து கெட்ட சகவாசங்களை விட்டெறிந்து இந்த சமுதாயத்தின் முன்னேற்றதிற்க்குப் பாடு படுவோம். எல்லோரும் சொல்கிறார்கள் நாளைய உலகம் இளைஞர்கள் கையில் என்று அப்படியென்றால் இன்றைய உலகம் யார் கையில்??? அதுவும் நம் கையில் என்று கூறி நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் பாடு படுவோம்....

1 comment:

Anonymous said...

வள்ளுவர் சொன்ன நட்புக்கான இலக்கணத்தை இன்றைய நாளில் அதுவும் கணினி உலகத்தில் கண்பது மிகவும் அரிது.......

Post a Comment